sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கன்னியாகுமரி

/

இறப்பிலும் பிரியாத குமரி நண்பர்கள்

/

இறப்பிலும் பிரியாத குமரி நண்பர்கள்

இறப்பிலும் பிரியாத குமரி நண்பர்கள்

இறப்பிலும் பிரியாத குமரி நண்பர்கள்


ADDED : செப் 07, 2024 01:49 AM

Google News

ADDED : செப் 07, 2024 01:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம், அருமனை அருகே குழிச்சலை சேர்ந்தவர் ஜான்சன், 60; ரப்பர் பால் வெட்டும் தொழிலாளி. அதே பகுதியைச் சேர்ந்தவர் ரசல்ராஜ், 60; கூலித் தொழிலாளி. இருவரும் பள்ளி பருவம் முதல் நண்பர்கள்.

குடும்ப பிரச்னையால், ஜான்சன் நேற்று ரப்பர் பால் வெட்டச் சென்ற இடத்தில், ரப்பர் மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்தார்.

நண்பர் ரசல் ராஜ் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, ஜான்சன் தற்கொலை பற்றி போனில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதைக்கேட்டு அதிர்ச்சியில் கையில் இருந்த உணவுடன் அப்படியே சிறிது நேரம் அமைதியாக இருந்த அவர், சுருண்டு விழுந்தார்.

அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இறப்பிலும் நண்பர்கள் இணைபிரியாதது அப்பகுதியினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.






      Dinamalar
      Follow us