sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கன்னியாகுமரி

/

அலைபேசியில் சவால் விட்டு காதலி வீடு சென்ற காதலனுக்கு தர்ம அடி

/

அலைபேசியில் சவால் விட்டு காதலி வீடு சென்ற காதலனுக்கு தர்ம அடி

அலைபேசியில் சவால் விட்டு காதலி வீடு சென்ற காதலனுக்கு தர்ம அடி

அலைபேசியில் சவால் விட்டு காதலி வீடு சென்ற காதலனுக்கு தர்ம அடி


ADDED : ஜூன் 11, 2025 02:47 AM

Google News

ADDED : ஜூன் 11, 2025 02:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே காதலியின் சகோதரனிடம் விட்ட சவாலை நிறைவேற்ற காதலி வீடு சென்ற காதலனுக்கு தர்ம அடி விழுந்தது.

அருமனை அருகே பள்ளிக்கூடம் பகுதியைச் சேர்ந்தவர் சிஜூ. நாகர்கோவில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அவரும் அப்பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரும் ஐந்தாண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் காதலி குடும்பத்தில் எதிர்ப்பு இருந்தது. பின் சில கட்டுப்பாடுகளுடன் சிஜூவுக்கு பெண்ணை திருமணம் செய்து கொடுக்க காதலியின் பெற்றோர் சம்மதித்தனர்.

ஆனால் அதை பொருட்படுத்தாமல் சிஜூ எல்லை மீறி நடந்ததால் இரு தரப்பினரிடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்தது. காதலியின் சகோதரன் ஜென்சியிடம் அலைபேசியில் பேசி சிஜூ தகராறில் ஈடுபட்டார். ஆத்திரமுற்ற ஜென்சி தைரியம் இருந்தால் எங்கள் ஏரியாவுக்கு வந்து பார் என சவால் விடுத்தார். அதை ஏற்று சிஜூ காதலி வீட்டுக்கே சென்றார். அவரை ஜென்சி சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். காயமுற்ற சிஜூ ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிஜூ புகாரின் பேரில் ஜென்சி மீது அருமனை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். ஜென்சி தலைமறைவாகி விட்டார்.






      Dinamalar
      Follow us