/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
அரசு நிலத்தை விற்க முயற்சி: தீக்குளிக்க முயன்ற ஹிந்து தமிழர் கட்சி நிர்வாகி
/
அரசு நிலத்தை விற்க முயற்சி: தீக்குளிக்க முயன்ற ஹிந்து தமிழர் கட்சி நிர்வாகி
அரசு நிலத்தை விற்க முயற்சி: தீக்குளிக்க முயன்ற ஹிந்து தமிழர் கட்சி நிர்வாகி
அரசு நிலத்தை விற்க முயற்சி: தீக்குளிக்க முயன்ற ஹிந்து தமிழர் கட்சி நிர்வாகி
ADDED : செப் 20, 2024 11:51 PM
நாகர்கோவில்:அரசு நிலத்தை விற்க முயற்சிப்பதை கண்டிப்பதாக கூறி நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற ஹிந்து தமிழர் கட்சி மாநில செயலாளர் ஈசானிய சிவனை 40, போலீசார் கைது செய்தனர்.
திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் குற்றவாளிகளை தூக்கில் போடும் தொழிலாளர்களுக்கு பார்வதிபுரத்தில் நிலம் ஒதுக்கப்பட்டது. இது ஆராச்சர் நிலம் எனப்படும். அரசு வசம் இருந்து வந்த இந்நிலத்தை சில தனியார் ஆக்கிரமித்திருந்தனர்.
நாகராஜன் கலெக்டராக இருந்தபோது இந்த நில ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அதை எதிர்த்து ஆக்கிரமிப்பாளர்கள் தொடர்ந்த வழக்கை அரசு முறைப்படி நடத்தாததால் மீண்டும் அவர்களுக்கு சாதகமாக உத்தரவு வெளியானது.
இந்நிலையில் இந்நிலத்தை பிளாட் போட்டு விற்கும் நடவடிக்கைகள் தொடர்கின்றன. அதை தடுத்து நிறுத்த கோரியும், ஆராச்சர் நிலத்தை அரசு கையகப்படுத்த கோரியும் வலியுறுத்தி ஹிந்து தமிழர் கட்சி மாநில செயலாளர் ஈசானிய சிவன் நேற்று காலை நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
போலீசார் அவரை தடுத்து தண்ணீரை ஊற்றி அழைத்து சென்றனர்.