sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கன்னியாகுமரி

/

டிரைவர் கொலை: மனைவியின் காதலன் உட்பட 2 பேர் கைது

/

டிரைவர் கொலை: மனைவியின் காதலன் உட்பட 2 பேர் கைது

டிரைவர் கொலை: மனைவியின் காதலன் உட்பட 2 பேர் கைது

டிரைவர் கொலை: மனைவியின் காதலன் உட்பட 2 பேர் கைது


ADDED : நவ 06, 2025 01:17 AM

Google News

ADDED : நவ 06, 2025 01:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகர்கோவில்: லாரி டிரைவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், மனைவியின் காதலன் உட்பட, இருவரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம், பிரம்மபுரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணதாஸ், 36. லாரி டிரைவர். இவரது மனைவி பவித்ரா. குழந்தைகள் இல்லை. நவ., 1 காலை வில்லுக்குறி அருகே பாழடைந்த கட்டடத்தில், கிருஷ்ணதாஸ் இறந்து கிடந்தார். விசாரித்த போலீசார், பவித்ரா, 33, மாமியார் முத்துலட்சுமி, 57, ஆகியோரை கைது செய்தனர்.

பவித்ராவிடம் நடத்திய விசாரணையில், 'நான் ரமேஷ் என்பருடன் தனிமையில் இருந்ததை பார்த்த கிருஷ்ணதாஸ் கோபத்தில், வீட்டில் இருந்த பொருட்களை அடித்து உடைத்து, மொபைல் போனையும் உடைத்தார்.

'இது குறித்து நான் ரமேஷிடம் கூறினேன். அப்போது அவர் இது பற்றி கவலைப்பட வேண்டாம்; நான் பார்த்துக் கொள்கிறேன் என கூறினார். அதன் பின் தான் கொலை நடந்தது' என்றார்.

இந்நிலையில், கேரளா மாநிலம், பம்பையில் பதுங்கியிருந்த ரமேஷ், அவரது நண்பர் விமல் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us