sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கன்னியாகுமரி

/

மருத்துவக்கல்லுாரி குடியிருப்பில் 57 பவுன் நகைகள் கொள்ளை

/

மருத்துவக்கல்லுாரி குடியிருப்பில் 57 பவுன் நகைகள் கொள்ளை

மருத்துவக்கல்லுாரி குடியிருப்பில் 57 பவுன் நகைகள் கொள்ளை

மருத்துவக்கல்லுாரி குடியிருப்பில் 57 பவுன் நகைகள் கொள்ளை


ADDED : நவ 04, 2025 01:56 AM

Google News

ADDED : நவ 04, 2025 01:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி வளாக குடியிருப்பில் உதவி பேராசிரியை ஆக்ஸிடி எஸ் தர்ஷினி 41, வீட்டில் 57 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை மாவட்டம் ரெங்கநாயகி தெரு தெற்கு பாளையத்தைச் சேர்ந்த ஆக்ஸிடி எஸ் தர்ஷினி ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உதவி பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார். மருத்துவமனை வளாகத்தில் உள்ள டாக்டர்கள் குடியிருப்பில் வசித்து வருகிறார். இவர் அக்., 30 ல் கோவை சென்றார்.

நேற்று காலை இவரது வீட்டு கதவு உடைக்கப்பட்டு இருப்பதை அதே குடியிருப்பில் வசிக்கும் டாக்டர் ரஜினிஷ் சிங் கவனித்து அவருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதைத்தொடர்ந்து ஆக்சிடி எஸ் தர்ஷினி கல்லூரிக்கு திரும்பினார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது இரும்பு பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 57 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. இதுகுறித்து அவர் ஆசாரிப்பள்ளம் போலீசில் புகார் செய்தார்.

போலீசார் இக் கொள்ளையில் ஈடு பட்டவர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us