/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
பொறியாளர், கணவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை
/
பொறியாளர், கணவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை
ADDED : டிச 07, 2024 08:12 AM

நாகர்கோவில் : கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பொன்னப்பநாடார் காலனியை சேர்ந்தவர் அமலா ஜெசி ஜாக்குலின், 55, கடந்த 1999 முதல், 2009 வரை ஊரக வளர்ச்சித் துறையில் உதவி செயற்பொறியாளராக பணிபுரிந்தார்.
அவரது கணவர் ராஜேஸ்வரன், 59. பணிக் காலத்தில் அமலா ஜெசி ஜாக்குலின், வருமானத்துக்கு அதிகமாக 22.40 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்துள்ளதாக புகார் எழுந்தது.
லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர் மற்றும் கணவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கு விசாரணை நாகர்கோவில் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது.
அமலா ஜெசி ஜாக்குலின், ராஜேஸ்வரனுக்கு தலா மூன்றாண்டுகள் சிறை தண்டனையும், ௫௦,௦௦௦ ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி சாமுவேல் பெஞ்சமின் நேற்று தீர்ப்பளித்தார்.
தற்போது அமலா ஜெசி ஜாக்குலின் தூத்துக்குடி யில் பணிபுரிகிறார்.