/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
நடுக்கடலில் கடல் தகவல் சேவை மைய கருவியை மீட்ட மீனவர்கள்
/
நடுக்கடலில் கடல் தகவல் சேவை மைய கருவியை மீட்ட மீனவர்கள்
நடுக்கடலில் கடல் தகவல் சேவை மைய கருவியை மீட்ட மீனவர்கள்
நடுக்கடலில் கடல் தகவல் சேவை மைய கருவியை மீட்ட மீனவர்கள்
ADDED : அக் 12, 2025 03:21 AM
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே கடல் தகவல் சேவை மைய கருவியை நடுக்கடலில் இருந்து மீனவர்கள் மீட்டனர்.
மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் இந்திய தேசிய கடல் தகவல் சேவை மையம் ஐதராபாத்தில் செயல்பட்டு வருகிறது.
கடல் அலைகளின் உயரம், கடல் நீரோட்டம், கடல் மேல் மட்ட வெப்ப நிலை ஆகியவற்றை கண்டறிந்து அரசுக்கு அறிக்கை அனுப்பும் பணியை இது செய்து வருகிறது.
இதற்காக போயா எனப்படும் டிரிப்பிட்டர் மிதவை கருவி கடலில் மிதக்க விடப்படுகிறது. இதில் செயற்கை கோள் இணைப்புடன் ஜி.பி.எஸ்., வெதர் சென்சார் கருவிகள் பொருத்தப்பட்டு பிளாஸ்டிக் மூடியுடன் எளிதில் சேதம் அடையாத துணி சுற்றப்பட்டிருக்கும்.
கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் கடலில் சென்னை பூம்புகாரில் இயங்கும் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் இந்த கருவி கடலில் நிறுவப்பட்டுள்ளது. இதன் மூலம் மீனவர்களுக்கு கடல் தகவல் சேவை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் குளச்சலைச் சேர்ந்த ஜெயசீலன் விசைப்படகில் ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார்.
அப்போது டிரிப்பிட்டர் கருவி கடலில் மிதந்து வந்து படகில் மோதி நின்றது. ஜெயசீலன் அதை மீட்டு படகில் கொண்டு வந்து நேற்று குளச்சல் மீன்பிடித்துறைமுகத்தில் சேர்த்தார். இதுகுறித்து எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் திட்ட அலுவலர் முபாரக் கருவியை பார்வையிட்டார்.
பின் கருவி மீன்பிடி துறைமுக வளாகத்தில் உள்ள மின்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் வைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசாரும் விசாரித்து வருகின்றனர்.