sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கன்னியாகுமரி

/

கண்ணாடி பாலம் திறப்பு திருவள்ளுவர் சிலைக்கு படகு ரத்து

/

கண்ணாடி பாலம் திறப்பு திருவள்ளுவர் சிலைக்கு படகு ரத்து

கண்ணாடி பாலம் திறப்பு திருவள்ளுவர் சிலைக்கு படகு ரத்து

கண்ணாடி பாலம் திறப்பு திருவள்ளுவர் சிலைக்கு படகு ரத்து


ADDED : ஜன 08, 2025 01:25 AM

Google News

ADDED : ஜன 08, 2025 01:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகர்கோவில்:கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் இருந்து கண்ணாடி பாலம் வழியாக திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் திருவள்ளுவர் சிலைக்கான படகு சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இங்கு கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலையை இணைத்து ரூ.37 கோடி செலவில் அமைக்கப்பட்ட கண்ணாடி பாலத்தை டிச., 30 முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அதன் பின் ஜன.,4 முதல் சுற்றுலா பயணிகள் பாலத்தில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கண்ணாடி பாலம் அமைக்கப்படுவதற்கு முன் பூம்புகார் போக்குவரத்து கழகப்படகு முதலில் விவேகானந்தர் பாறைக்கும், பின்னர் அங்கிருந்து திருவள்ளுவர் சிலைக்கும் சென்று திரும்பும். தற்போது விவேகானந்தர் பாறைக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் கண்ணாடி பாலம் வழியாக திருவள்ளுவர் சிலைக்கு சென்று வருகின்றனர்.

இதனால் திருவள்ளுவர் சிலைக்கு பயணிகளை படகில் அழைத்துச் செல்ல வேண்டிய சூழ்நிலை இல்லாததை கருத்தில் கொண்டு அங்கு படகு செல்வது ரத்து செய்யப்பட்டுள்ளது.

விவேகானந்தர் பாறையை பார்த்த பின் திருவள்ளுவர் சிலைக்கு சென்று திரும்பி விவேகானந்தர் பாறையில் இருந்தே பயணிகள் கரைக்கு திரும்புகின்றனர். இதனால் கூடுதல் சர்வீஸ் நடத்த முடியும் என்று பூம்புகார் போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறினர்.






      Dinamalar
      Follow us