sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கன்னியாகுமரி

/

பேன்ட் சரியாக தைக்காததால் டெய்லர் குத்திக் கொலை ஓட்டல் தொழிலாளி கைது

/

பேன்ட் சரியாக தைக்காததால் டெய்லர் குத்திக் கொலை ஓட்டல் தொழிலாளி கைது

பேன்ட் சரியாக தைக்காததால் டெய்லர் குத்திக் கொலை ஓட்டல் தொழிலாளி கைது

பேன்ட் சரியாக தைக்காததால் டெய்லர் குத்திக் கொலை ஓட்டல் தொழிலாளி கைது


ADDED : மே 24, 2025 02:28 AM

Google News

ADDED : மே 24, 2025 02:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகர்கோவில்:பேன்ட் சரியாக தைத்துக்கொடுக்காததால் நாகர்கோவிலில் கடைக்கு உள்ளேயே டெய்லர் கத்தரிக்கோலால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இதில் ஓட்டல் தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரிமாவட்டம் பூதப்பாண்டி அருகே திட்டு விளையைச் சேர்ந்தவர் செல்வன் 60. டெய்லர். நாகர்கோவில் டதி பள்ளி அருகே பேலஸ் ரோட்டில் இதற்கான கடை நடத்தினார். நேற்று முன்தினம் இரவு இவர் அவரது கடையில் கத்திக் குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அவரிடம் துணி தைப்பதற்காக கொடுக்க வந்த போலீஸ்காரர் இது பற்றி போலீசுக்கு தெரிவித்தார்.

வடசேரி போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., காட்சியை ஆய்வு செய்து செய்தபோது சட்டை அணியாமல் 'ஹெல்மெட்' மட்டும் அணிந்து கொண்டு வெளியேறிய வாலிபர் பைக்கில் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

இதன் அடிப்படையில் ஏ.எஸ்.பி. லலித்குமார் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அவரை நாகர்கோவிலில் உள்ள ஒரு ஓட்டலில் வைத்து கைது செய்தனர். விசாரணையில் அவர் துாத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை அடுத்த செய்துநல்லுாரை சேர்ந்த சந்திரமணி 37 ,என்பது தெரியவந்தது.

நாகர்கோவிலில் உள்ள ஓட்டலில் செப் ஆக வேலை பார்த்து வருகிறார். தனது பேன்ட் தைக்க டெய்லர் செல்வனிடம் கொடுத்திருந்தார். அவர் சரியாக தைத்து தரவில்லை என்று கூறி வாக்குவாதம் செய்தபோது ஆத்திரத்தில் கத்திரிக்கோலை அவரின் முதுகு மற்றும் தலையில் குத்தி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். கைது செய்யப்பட்ட சந்திரமணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.






      Dinamalar
      Follow us