sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கன்னியாகுமரி

/

மனைவியை கொலை செய்து உடல் அருகே அமர்ந்த கணவர்

/

மனைவியை கொலை செய்து உடல் அருகே அமர்ந்த கணவர்

மனைவியை கொலை செய்து உடல் அருகே அமர்ந்த கணவர்

மனைவியை கொலை செய்து உடல் அருகே அமர்ந்த கணவர்


ADDED : ஜூன் 30, 2025 02:57 AM

Google News

ADDED : ஜூன் 30, 2025 02:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகர்கோவில்: கருங்கல் அருகே மனைவியை கொன்று, இரவு முழுதும் உடல் அருகே இருந்த கணவர் கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் அருகே படுவூர் காட்டுவிளையை சேர்ந்தவர் டார்வின், 46; கூலி தொழிலாளி. மனைவி பபிதா நித்யசெல்வி, 39. மகன், மகள் உள்ளனர். மகள் அப்பகுதியில் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில் தங்கி படிக்கிறார். மகன் பாட்டி வீட்டுக்கு சென்றிருந்தார்.

வீட்டோடு மாப்பிள்ளையாக இருப்பதை பலரும் கிண்டல் செய்வதாக கூறி டார்வின், மனைவியுடன் தகராறு செய்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டதில், ஆத்திரமடைந்த டார்வின், மனைவியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்தார். பின், செய்வதறியாது மனைவியின் உடல் அருகே இரவு முழுதும் அமர்ந்திருந்தார்.

அக்கம்பக்கத்தினர் தகவலில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து, உள்ளே சென்று, டார்வினை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us