/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
30 ஆயிரம் கிலோ செயற்கைகோளை சுமந்து செல்லும் ராக்கெட் இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்
/
30 ஆயிரம் கிலோ செயற்கைகோளை சுமந்து செல்லும் ராக்கெட் இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்
30 ஆயிரம் கிலோ செயற்கைகோளை சுமந்து செல்லும் ராக்கெட் இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்
30 ஆயிரம் கிலோ செயற்கைகோளை சுமந்து செல்லும் ராக்கெட் இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்
ADDED : ஜன 13, 2025 01:00 AM
நாகர்கோவில்: 30 ஆயிரம் கிலோ செயற்கைகோளை சுமந்து செல்லும் ராக்கெட் தயாரிப்பதற்கான திட்டப் பணிகள் நடந்து வருவதாக இஸ்ரோ தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நாராயணன் கூறியுள்ளார்.
அவர் நேற்று கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப் பதியில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:
முக்கியமான பொறுப்பை பிரதமர் மோடி கொடுத்திருக்கி றார். இஸ்ரோ மிகப்பெரிய அமைப்பு. இந்த அமைப்பின் தலைவராக பொறுப்பு கிடைத்திருப்பதற்கு இறைவனின் அருள், பெற்றோர், உறவினர், நண்பர்கள் ஆசீர்வாதங்கள் தான் காரணம்.
இஸ்ரோ-விலுள்ள 17500 ஊழியர்கள் நன்றாக பணியாற்றக் கூடியவர்கள். ஒரு குழுவாக இணைந்து நாட்டுக்காக சேவையாற்றும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நாட்டை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்ற பிரதமர் என்ன வழிகாட்டுதல் கொடுத்து இருக்கிறாரோ அந்த பணியை அனைவரும் இணைந்து செய்து நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கும் வேலையை செய்து வருகிறோம்.
ஏற்கனவே இரண்டு செயற்கைகோள்களை அருகருகே கொண்டு நிறுத்தி நாம் சாதனை படைத்திருக்கிறோம். இது சந்திராயன் 4 நிலவில் தரை இறங்குவதற்கு பயன்படும். இந்தியாவிற்கு விண்வெளியில் ஆய்வுக்கூடம் அமைக்க இருக்கிறோம்.
அடுத்த கட்டமாக ஆட்களை விண்வெளிக்கு கொண்டு சென்று அழைத்து வர இருக்கிறோம். தொலைத்தொடர்பு, தொலை உணர்வு நேவிகேஷன் சேட்டிலைட் ஏவுதல் போன்ற எதிர்கால திட்டங்கள் உள்ளன. நான் பொறுப்பேற்ற பிறகு அனைவருடனும் விரிவாக ஆலோசனை நடத்தி அடுத்த திட்டங்கள் குறித்து அறிவிப்போம்.
குலசேகரப்பட்டினத்தில் நடைபெற்று வரும் ராக்கெட் ஏவுதள பணி இன்னும் இரண்டு ஆண்டுகளில் நிறைவு பெறும். 30 ஆயிரம் கிலோ எடை கொண்ட செயற்கைகோளை சுமந்துசெல்லும் ராக்கெட் தயாரிக்க திட்டமிட்டு பணிகள் நடந்துவருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.