sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கன்னியாகுமரி

/

சீனாவில் மருத்துவம் படித்த மகன் தந்தையை கொன்றதால் கைது

/

சீனாவில் மருத்துவம் படித்த மகன் தந்தையை கொன்றதால் கைது

சீனாவில் மருத்துவம் படித்த மகன் தந்தையை கொன்றதால் கைது

சீனாவில் மருத்துவம் படித்த மகன் தந்தையை கொன்றதால் கைது


ADDED : பிப் 07, 2025 01:31 AM

Google News

ADDED : பிப் 07, 2025 01:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகர்கோவில்:மருத்துவ படிப்பை பாதியில் விட்டதால், ஏற்பட்ட குடும்ப பிரச்னையில் தந்தையை வெட்டிக்கொன்ற மகன் போலீசில் சரணடைந்தார்.

கேரள தமிழக எல்லையான வெள்ளறடையை சேர்ந்தவர் ஜோஸ், 70. மனைவி சுஷமகுமாரி. இவர்களது ஒரே மகன் பிரஜின், 28. சீனாவில் எம்.பி.பி.எஸ்., படித்து வந்தார். கொரோனா காலத்தில் படிப்பை பாதியில் விட்டு, ஊர் திரும்பியவர் பின் செல்லவில்லை. இந்த படிப்புக்காக ஜோஸ் அதிக அளவில் பணம் செலவழித்து இருந்தார்.

இதனால் தந்தை, மகனுக்கு இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவில், மீண்டும் பிரச்னை ஏற்பட்டபோது, தந்தையை அரிவாளால் வெட்டி பிரஜின் கொலை செய்தார். இதைப் பார்த்த தாய் சுஷமகுமாரி மயக்கம் போட்டு விழுந்தார். வெள்ளறடை போலீசில், பிரஜின் சரணடைந்தார். போலீசார் வந்து சுஷமகுமாரியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தன்னை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்காததால், தந்தையை கொலை செய்ததாக பிரஜின் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.






      Dinamalar
      Follow us