sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கன்னியாகுமரி

/

போலிசாமியாடி என கிண்டல் செய்ததால் மதுவில் விஷம் கலந்து கொன்றேன் வழக்கில் கைதானவர் வாக்குமூலம் மற்றொரு சாமியாடி வாக்குமூலம்

/

போலிசாமியாடி என கிண்டல் செய்ததால் மதுவில் விஷம் கலந்து கொன்றேன் வழக்கில் கைதானவர் வாக்குமூலம் மற்றொரு சாமியாடி வாக்குமூலம்

போலிசாமியாடி என கிண்டல் செய்ததால் மதுவில் விஷம் கலந்து கொன்றேன் வழக்கில் கைதானவர் வாக்குமூலம் மற்றொரு சாமியாடி வாக்குமூலம்

போலிசாமியாடி என கிண்டல் செய்ததால் மதுவில் விஷம் கலந்து கொன்றேன் வழக்கில் கைதானவர் வாக்குமூலம் மற்றொரு சாமியாடி வாக்குமூலம்


ADDED : மார் 07, 2024 01:58 AM

Google News

ADDED : மார் 07, 2024 01:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகர்கோவில்:நாகர்கோவில் வடலிவிளை சுடலை ஆண்டவர் கோவிலில் மார்ச் 1ல் பூஜை நடந்தபோது, படையலில் வைக்கப்பட்டிருந்த மதுவை குடித்த செல்வகுமார், 47, என்பவர் இறந்தார்.

அருள், 33, என்பவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். கோட்டார் போலீசார், அதே பகுதியைச் சேர்ந்த அஜி என்ற சதீஷ், 48, என்பவரை கைது செய்தனர்.

போலீசில் அவர் அளித்துள்ள வாக்குமூலம்:

நானும் அருளும், ஒரே கோவிலில் சாமியாடுவோம். கோவில் நிர்வாகம் தொடர்பாக பிரச்னை வந்ததால் எங்கள் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

போது, அருள் என்னை போலியாக ஆடுவதாக கிண்டல் செய்தார். கோவில் படையலில் இருக்கும் மது, தனக்கு தான் வேண்டும் என்று அருள் கேட்டிருந்தார்.

இதை தெரிந்து கொண்ட நான், அந்த மதுவில் பூச்சிக்கொல்லிமாத்திரைகளை கலந்தேன்.

பூஜை முடிந்ததும் அந்த மதுவை அருள் எடுத்துச் சென்றார். அந்த சமயத்தில் அங்கு வந்த செல்வகுமார், மது தனக்கும் வேண்டும் என்று கேட்டார். இருவரும் மது குடித்தனர்.

வீட்டுக்குச் சென்ற செல்வகுமார் வாந்தி எடுத்து இறந்தார். அருள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு கூறியுள்ளார்.

அஜி நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.






      Dinamalar
      Follow us