sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கன்னியாகுமரி

/

திருமணத்துக்கு சம்மதித்த பெண் காதலனுடன் சென்று திருமணம்

/

திருமணத்துக்கு சம்மதித்த பெண் காதலனுடன் சென்று திருமணம்

திருமணத்துக்கு சம்மதித்த பெண் காதலனுடன் சென்று திருமணம்

திருமணத்துக்கு சம்மதித்த பெண் காதலனுடன் சென்று திருமணம்

5


ADDED : ஜூலை 08, 2025 05:02 AM

Google News

ADDED : ஜூலை 08, 2025 05:02 AM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகர்கோவில் : நேற்று திருமணம் நடக்க இருந்த நிலையில் வீட்டிலிருந்து மாயமாகி காதலனுடன் திருமணம் செய்த பெண் அந்த போட்டோவை நிச்சயிக்கப்பட்ட இளைஞருக்கும் வீட்டுக்கும் அனுப்பி வைத்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே புலியூர்குறிச்சியை சேர்ந்தவர் ஷைனி பிரியா 30. கோவையில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் இரணியல் பகுதியைச் சேர்ந்த இளைஞருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நேற்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது. திருமணத்துக்கு சைனி சம்மதம் தெரிவித்து ஏற்பாடுகள் நடைபெற்றன.

அழைப்பிதழ் கொடுப்பது முதல் திருமண வேலைகள் அனைத்திலும் பங்கு பெற்ற ஷைனி பிரியா ஜூலை 5ல் வீட்டில் இருந்து மாயமானார். அவரது அலைபேசி சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து தக்கலை போலீசில் சகோதரர் சஞ்சீவ் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் நேற்று காலை ஷைனியின் பெற்றோர், உறவினர்களுக்கும், திருமணம் நிச்சயக்கப்பட்ட இளைஞருக்கும் காதலனுடன் மணக்கோலத்தில் இருக்கும் போட்டோவை ைஷனி அலைபேசியில் அனுப்பி வைத்தார்.

கோயிலில் வைத்து தங்கள் திருமணம் நடைபெற்றதாகவும் தன்னை மன்னித்து விடும்படியும் அதில் தெரிவித்திருந்தார்.






      Dinamalar
      Follow us