sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 23, 2025 ,ஐப்பசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கன்னியாகுமரி

/

டி.வி.ராமசுப்பையர் நினைவு அறக்கட்டளை சொற்பொழிவு

/

டி.வி.ராமசுப்பையர் நினைவு அறக்கட்டளை சொற்பொழிவு

டி.வி.ராமசுப்பையர் நினைவு அறக்கட்டளை சொற்பொழிவு

டி.வி.ராமசுப்பையர் நினைவு அறக்கட்டளை சொற்பொழிவு


ADDED : அக் 18, 2025 01:21 AM

Google News

ADDED : அக் 18, 2025 01:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகர்கோவில்: நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி முன்னாள் மாணவர் சங்கமும் வரலாற்று துறையும் இணைந்து நடத்திய தினமலர் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் 15வது அறக்கட்டளை சொற்பொழிவு நேற்று ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி முன்னாள் மாணவர் சங்க அரங்கில் நடைபெற்றது.

வரலாற்று துறை தலைவர் அமுதகுமாரி வரவேற்றார். கல்லூரி முதல்வர் டாக்டர் ஹென்றி ராஜா தலைமை வகித்தார். அரசு கலை, அறிவியல் கல்லூரியின் முன்னாள் முதல்வர் டாக்டர் வெங்கடேசன் கருத்தரங்கை தொடங்கி வைத்தார்.

முன்னாள் மாணவர் சங்க பொருளாளர் பேராசிரியர் மோகன்தாஸ் டி.வி.ராமசுப்பையர் அறக்கட்டளை குறித்த அறிமுக உரை நிகழ்த்தினார்.

அவர் பேசுகையில் தினமலர் நாளிதழை உருவாக்கிய டி.வி. ராமசுப்பையர் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் படித்தவர். அவரது பிள்ளைகளும் இந்த கல்லூரியில் படித்தனர். முன்னாள் மாணவர் சங்க கட்டடம் கட்டுவதில் அவரது வாரிசுகள் முக்கிய பங்கு வகித்துள்ளனர் என்றார்.

ரூபன் கலைக் கல்லூரி முன்னாள் முதல்வர் டாக்டர் லாரன்ஸ், 1937 முதல் 67 வரை உள்ள கால கட்டங்களில் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி நிர்வாகத்தின் வரலாற்று நிகழ்வுகள் என்ற தலைப்பில் பேசினார்.

உதவி பேராசிரியர் வின்ஸ் ஜோயல் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us