/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட இரு மாணவர்கள் கைது
/
ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட இரு மாணவர்கள் கைது
ADDED : ஜூலை 18, 2025 02:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே உள்ள அரசு பள்ளி ஒன்றில், அப்பகுதியை சேர்ந்த மாணவர் ஒருவர் பிளஸ் -1 படிக்கிறார்.
சம்பவத்தன்று பிளஸ் 1 மாணவர் பள்ளி கழிப்பறைக்கு சென்ற போது, பிளஸ் 2 மாணவர்கள் மூன்று பேர் கட்டாயப்படுத்தி, ஓரின சேர்க்கையில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து பாதிப்புக்குள்ளான மாணவர் நாகர்கோவில் போலீசில் அளித்த புகாரில், மூன்று மாணவர்கள் மீதும் போக்சோ வழக்கு பதிவு செய்து, இரு மாணவர்களை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான மற்றொரு மாணவரை தேடி வருகின்றனர்.