sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 04, 2026 ,மார்கழி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கன்னியாகுமரி

/

'இது மோடியின் காரன்டி': கன்னியாகுமரியில் பிரதமர் உறுதி

/

'இது மோடியின் காரன்டி': கன்னியாகுமரியில் பிரதமர் உறுதி

'இது மோடியின் காரன்டி': கன்னியாகுமரியில் பிரதமர் உறுதி

'இது மோடியின் காரன்டி': கன்னியாகுமரியில் பிரதமர் உறுதி


UPDATED : மார் 16, 2024 11:26 AM

ADDED : மார் 15, 2024 11:39 PM

Google News

UPDATED : மார் 16, 2024 11:26 AM ADDED : மார் 15, 2024 11:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகர்கோவில்:''தமிழகத்தின் பெருமைக்குரிய, பாரம்பரியமிக்க சிறப்பம்சத்தை மோடி இருக்கும்வரை காப்பாற்றுவேன். இது, மோடியின் காரன்டி,'' என, கன்னியாகுமரியில் நடந்த பா.ஜ., பொதுக்கூட்டத்தில், பிரதமர் மோடி பேசினார்.

குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில், பா.ஜ., பொதுக்கூட்டம் நடந்தது. முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வரவேற்றார்.

ஒற்றுமை யாத்திரை


அதில் பிரதமர் மோடி பேசியதாவது:

அண்ணாமலை குறிப்பிட்டது போல், 1991ல் நான், 'ஏக்தா யாத்திரா - ஒற்றுமை யாத்திரை' புறப்பட்டு காஷ்மீர் வரை சென்றிருந்தேன். இப்போது காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வந்துள்ளேன். நாட்டை துண்டாட நினைப்பவர்களுக்கு, காஷ்மீர் மக்கள், நல்ல பாடம் புகட்டினர். இங்கும் அதுதான் நடக்கப் போகிறது.

தி.மு.க., - காங்கிரஸ், துடைத்தெறியப்படும். காங்கிரஸ் -- தி.மு.க., கூட்டணியின் வெற்றி தலைக்கனம், முற்றிலும் அழிக்கப்படும். 'இண்டியா' கூட்டணியால், தமிழகத்தில் எந்த வளர்ச்சி திட்டங்களையும் முன்னெடுக்க முடியாது.

அவர்களின் வரலாற் றில், மோசடியும், ஊழலும் முதன்மையாக இருக்கின்றன. அரசியலில் வந்து கொள்ளையடிக்க வேண்டும் என்ற ஒற்றை இலக்கு தான் அவர்களுக்கு உள்ளது.

கன்னியாகுமரி எப்போதும், பா.ஜ.,வுக்கு பேரன்பை கொடுத்துக் கொண்டிருக்கிறது. தி.மு.க., - காங்., கூட்டணி இங்குள்ள மக்களை சுரண்டலாம் என, வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறது. 20 ஆண்டுகளாக அவர்களின் செயல்பாட்டை பார்த்தால் அது நமக்கு தெரியும்.

மார்த்தாண்டம், பார்வதி புரம் மேம்பாலங்கள் பா.ஜ., வந்த பிறகுதான் அமைந்தன. 40 ஆண்டுகளாக கண்டுகொள்ளப்படாத இரட்டை ரயில் கனவை நிறைவேற்ற, தீவிரமாக பணி செய்து கொண்டிருக்கிறோம்; விரைவில் செயல்படுத்தப்படும்.

தி.மு.க., தமிழகத்தின், தமிழ் பண்பாட்டின் எதிரி. புதிய பார்லிமென்டில், தமிழரின் பெருமையை நிலைநாட்ட செங்கோல் நிறுவினோம். அதை தி.மு.க., புறக்கணித்தது. தமிழகத்தின் பெருமைக்குரிய பாரம்பரியமிக்க சிறப்பு அம்சத்தை மோடி இருக்கும்வரை காப்பாற்றுவேன். இது, மோடியின் காரன்டி.

கன்னியாகுமரியில் இருந்து உங்கள் ஆதரவையும் குரலையும் கேட்டு, டில்லியில் இருப்பவர்களுக்கு துாக்கம் கெட்டது. உங்கள் அன்பும் பாசமும் ஆதரவும், எனக்கு மட்டும் அல்ல; மொத்த இந்தியாவுக்கும் பலம் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

தி.மு.க., - காங்., தவறு


'இண்டியா' கூட்டணியை சேர்ந்தவர்கள், தமிழ் மக்களின் உயிரோடு விளையாடும் குற்றத்தை செய்து கொண்டிருக்கின்றனர். இலங்கையில், நம் மீனவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

அவர்கள் உயிரோடு திரும்ப முடியாது என்றனர். நான் துாங்கிக் கொண்டிருக்கவில்லை... எத்தனை வழிகள் உண்டோ அத்தனையும் உடைத்தோம்; எந்தவித சேதாரமுமின்றி, அவர்களை மீட்டு வந்தோம்.

மக்கள் கண்களில் விழுந்த துாசி, 'இண்டியா' கூட்டணி. மீனவ மக்கள் இனியும் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள்; பொங்கி எழுவர். தங்கள் பாவ கணக்குக்கு அவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

ஏனென்றால் கேட்பது நீங்கள்... கேட்பீர்களா... கேட்பீர்களா? (கூட்டத்தினர் மொபைல்போனில் உள்ள டார்ச் லைட்டை அடித்து ஆமோதித்தனர்.)

இவ்வாறு மோடி பேசினார்.

மோடியே வரவேண்டும்'


கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது:பிரதமர் தனக்கு பிடித்தமான மண்ணுக்கு வந்துள்ளார். இங்கிருந்து 3 கி.மீ., துாரத்தில் 1991 டிச., 11ல் பிரதமர் மோடி, முரளி மனோகர் ஜோஷியுடன், ஒற்றுமை யாத்திரை வந்தார். அப்போது காங்., அரசு ஓட்டு வங்கி அரசியல் நடத்திக் கொண்டிருந்தது. வேறு வேறு கட்சிகள் நாட்டை துண்டாக்கிக் கொண்டிருந்தன. பிரிந்து கிடந்த மக்கள் வேற்றுமையில் இருந்தனர். மொத்தம், 45 நாட்கள் கழித்து, 1992 ஜன., 26ல், காஷ்மீர் லால் சவுக்கில், மோடி மூவர்ண கொடியை ஏற்றினார். 'என் தாய்ப்பாலை குடித்த நான், யாருக்கும் பயப்பட மாட்டேன்' என்றார்.
இதே மண்ணில், 1892ல் நரேந்திர தத்தா வந்தபோது, கடலில் குதித்து, டிச., 24, 25, 26ல் பாறையில் அமர்ந்து தவம் செய்தார். தான் யார், தன் நாடு எப்படி என்பதை உணர்ந்து, ஞானியானார். அதே போல் நம் நரேந்திர மோடி, 1950ல், ராமகிருஷ்ண மடத்திற்கு, ஞானியாக இருமுறை சென்றார். அங்கிருந்த அஸ்வதானந்தா, 'நீ நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும்' என திருப்பி அனுப்பினார். பிரதமர் மோடி, 142 கோடி மக்களை வழிநடத்தும் ஞானியாக உள்ளார். அவர் மூன்றாவது முறையும் பிரதமராக வர வேண்டும். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.



துளிகள்:தொண்டர்கள் உற்சாகம்; மோடி நெகிழ்ச்சி

!
* பிரதமர் தி.மு.க., - காங்., கூட்டணி குறித்து குறிப்பிடும்போது, 'மோடி... மோடி...' என தொண்டர்கள் உற்சாக குரல் எழுப்பினர். பேச்சை நிறுத்திவிட்டு பிரதமர் ரசித்து, 'உங்கள் பாசத்தை உணர்கிறேன்' என்றார்.
* கூட்டணி கட்சியான மக்கள் முன்னேற்ற கழக ஜான்பாண்டியன், ச.ம.க.,வை கலைத்துவிட்டு பா.ஜ.,வுடன் இணைந்த சரத்குமார், ராதிகா, விஜயதரணி பங்கேற்றனர்.
* மத்திய அமைச்சர் முருகன், தமிழக பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் வானதி, நயினார் நாகேந்திரன், காந்தி, மகளிரணி நிர்வாகிகள் உமாரதி, மீனா தேவ், மாநில பொதுச்செயலர் கருப்பு முருகானந்தம், பொதுச்செயலர் பாலகணபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.








      Dinamalar
      Follow us