sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 06, 2025 ,கார்த்திகை 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கன்னியாகுமரி

/

 போலீஸ் ஸ்டேஷனில் தீக்குளிக்க முயன்ற இளம்பெண்

/

 போலீஸ் ஸ்டேஷனில் தீக்குளிக்க முயன்ற இளம்பெண்

 போலீஸ் ஸ்டேஷனில் தீக்குளிக்க முயன்ற இளம்பெண்

 போலீஸ் ஸ்டேஷனில் தீக்குளிக்க முயன்ற இளம்பெண்


ADDED : டிச 06, 2025 02:16 AM

Google News

ADDED : டிச 06, 2025 02:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகர்கோவில்: ஆபாசமாக திட்டியவர் மீது புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் இளம்பெண் தக்கலை போலீஸ் ஸ்டேஷனில் தீக்குளிக்க முயன்றார்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே மாதிரி குளத்தின் கரையைச் சேர்ந்தவர் மல்லிகா 34. இவர் பத்மநாபபுரம் அரண்மனை அருகே கடை நடத்தி வருகிறார். அருகில் கடை நடத்தும் மற்றொருவர் இவரது கடைக்கு தொந்தரவு கொடுக்கும் வகையில் மல்லிகாவின் கடை தெரியாமல் இருக்கும் அளவு பேக்குகளை அடுக்கி வைத்துள்ளார்.

இது தொடர்பாக இவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் அந்த நபர் ஆபாச வார்த்தைகளால் மல்லிகாவை திட்டியதாக கூறி தக்கலை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.

இந்த மனு மீது நடவடிக்கை எடுக்காத நிலையில் நேற்று காலை போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த மல்லிகா, திடீரென்று தனது உடலில் மண்ணெண்ணை ஊற்றினார்.

சுதாரித்துக் கொண்ட போலீசார் அவரை காப்பாற்றி தக்கலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேல்விசாரணை நடக்கிறது.






      Dinamalar
      Follow us