sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மீன் விற்பனைக்கு நிரந்தர தடை கூடாதுமீனவர் சங்கத்தினர் கலெக்டரிடம் மனு

/

மீன் விற்பனைக்கு நிரந்தர தடை கூடாதுமீனவர் சங்கத்தினர் கலெக்டரிடம் மனு

மீன் விற்பனைக்கு நிரந்தர தடை கூடாதுமீனவர் சங்கத்தினர் கலெக்டரிடம் மனு

மீன் விற்பனைக்கு நிரந்தர தடை கூடாதுமீனவர் சங்கத்தினர் கலெக்டரிடம் மனு


ADDED : ஏப் 04, 2025 01:06 AM

Google News

ADDED : ஏப் 04, 2025 01:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மீன் விற்பனைக்கு நிரந்தர தடை கூடாதுமீனவர் சங்கத்தினர் கலெக்டரிடம் மனு

கரூர்:மாயனுார் கதவணை அருகில், மீன் விற்பனைக்கு நிரந்தர தடை கூடாது என, குளித்தலை, முசிறி உள்ளாட்டு மீனவர்கள் சங்கம் சார்பில், கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

அதில், கூறியிருப்பதாவது: கிருஷ்ணராயபுரம் அருகில், மாயனுார் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டுள்ளது. இங்கு மீன்கள் வளர்க்கப்படுகிறது. உள்ளூர் மீனவர்கள் பரிசலில் சென்று, மீன்களை பிடித்து கொண்டு வந்து கட்டளை மேட்டு வாய்க்கால் கரையில் வைத்து விற்பனை செய்கின்றனர். தற்போது காவிரி, -வைகை,- குண்டாறு இணைப்பு திட்ட பணிகள் நடக்கிறது. இங்கு, வாய்க்கால் வெட்டும் பணி நடக்க இருப்பதால், மீன் கடை போடக்

கூடாது என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது, கடைகள் போடுவதை தவிர்த்து விடுகிறோம். இது, நிரந்தரமான தடையாக இருக்கக்கூடாது. இப்பணிகள் முடிவடைந்தவுடன், மீண்டும் நிரந்தரமாக கடைகள் அமைத்து கொள்ள அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us