/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
லாலாப்பேட்டை மண்டியில் வாழைத்தார்கள் விற்பனை
/
லாலாப்பேட்டை மண்டியில் வாழைத்தார்கள் விற்பனை
ADDED : ஆக 30, 2024 01:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம், ஆக. 30-
லாலாப்பேட்டை மண்டியில், வாழைத்தார்கள் விற்பனை நடந்தது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த பிள்ளபாளையம், வல்லம், கொம்பாடிப்பட்டி, வீரவள்ளி, வீரகுமரான்பட்டி, மகாதானபுரம், நந்தன்கோட்டை, கள்ளப்பள்ளி தெற்கு ஆகிய பகுதிகளில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்துள்ளனர். வாழைத்தார்கள் அறுவடை செய்யப்பட்டு, லாலாப்பேட்டை வாழைக்காய் ஏலம் கமிஷன் மண்டியில் வைத்து விற்பனை செய்து வருகின்றனர். நேற்று பூவன் தார், 250 ரூபாய், ரஸ்தாளி, 300 ரூபாய், கற்பூரவள்ளி தார், 200 ரூபாய்க்கு விற்கப்பட்டது.