/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாசு இல்லாத போகி பண்டிகையைமக்கள் கொண்டாட அறிவுறுத்தல்
/
மாசு இல்லாத போகி பண்டிகையைமக்கள் கொண்டாட அறிவுறுத்தல்
மாசு இல்லாத போகி பண்டிகையைமக்கள் கொண்டாட அறிவுறுத்தல்
மாசு இல்லாத போகி பண்டிகையைமக்கள் கொண்டாட அறிவுறுத்தல்
ADDED : ஜன 12, 2025 01:13 AM
மாசு இல்லாத போகி பண்டிகையைமக்கள் கொண்டாட அறிவுறுத்தல்
கரூர்,:மாசு இல்லாத, போகி பண்டிகையை மக்கள் கொண்டாட அறிவுறுத்தப்பட்டுள்ளது.தை பொங்கலுக்கு முந்தைய நாளை, போகி பண்டிகையாக பழையன கழிதலும், புதியன புகுதலுமாக கொண்டாடி வருவது வழக்கம். இந்நாளில், தங்கள் வீட்டில் உள்ள பழைய வேண்டாத பொருள்களையும், தங்கள் வசமுள்ள செயற்கை பொருள்களான டயர்கள், பிளாஸ்டிக் மற்றும் இதர தேவையற்றவைகளையும் எரிக்கும் பழக்கத்தை கையாண்டு வருகின்றனர். இதனால், ஏற்படும் நச்சு புகையால் சுற்றுப்புற காற்றின் தன்மை மாசுபடுகிறது.மேலும் கண், மூக்கு, தொண்டை, தோல் ஆகியவைகளில் எரிச்சலும் ஏற்படுகிறது. ஆஸ்துமா, மூச்சு திணறல் மற்றும் இதர உடல் நலக்கேடுகளும் ஏற்படுகிறது.
காற்றை மாசுபடுத்தும் செயல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1986, பிரிவு (15)-ன் படி, இது தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே போகி பண்டிகையன்று டயர்கள், பிளாஸ்டிக், ரப்பர் மற்றும் இதர கழிவு பொருள்களை எரிக்காமல், குப்பையை முறைப்படி அகற்றி போகி திருநாளை மாசு இல்லாமலும், மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதுடன் சுற்றுச்சூழலையும், மக்களின் உடல்நலத்தையும் பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.
இத்தகவலை கலெக்டர் தங்கவேலு தெரிவித்துள்ளார்.