/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அன்ன காமாட்சியம்மன் கோவிலில்சிறப்பு அபிஷேக, ஆராதனை விழா
/
அன்ன காமாட்சியம்மன் கோவிலில்சிறப்பு அபிஷேக, ஆராதனை விழா
அன்ன காமாட்சியம்மன் கோவிலில்சிறப்பு அபிஷேக, ஆராதனை விழா
அன்ன காமாட்சியம்மன் கோவிலில்சிறப்பு அபிஷேக, ஆராதனை விழா
ADDED : பிப் 20, 2025 01:57 AM
அன்ன காமாட்சியம்மன் கோவிலில்சிறப்பு அபிஷேக, ஆராதனை விழா
கரூர்:கரூர், அன்ன காமாட்சியம்மன் கோவில், 102வது ஆண்டு திருவிழாவையொட்டி சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.
கரூர், மேற்கு பிரதட்சணம் சாலையில் உள்ள அன்ன காமாட்சியம்மன் கோவிலில் கடந்த, 17 மாலை, 5:00 மணிக்கு கோவிலின், 102வது ஆண்டு விழாவை முன்னிட்டு, அமராவதி ஆற்றில் இருந்து, கரகம் பாலித்து வரும் நிகழ்ச்சி தொடங்கியது. நேற்று முன்தினம் காலை, 9:00 மணிக்கு குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. விரதமிருந்த ஏராளமான பக்தர்கள், குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். பின், 10:30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதையடுத்து அம்மன் திருவீதி உலா மற்றும் நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சி, கரகாட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.
நேற்று காலை, 11:00 முதல், மதியம், 12:00 மணி வரை பொங்கல், மாவிளக்கு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு பூஜை செய்து அம்மனை வழிபட்டனர். அன்ன காமாட்சியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. பின், கரகம் ஆற்றுக்கு செல்லும் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

