/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
டூவீலரிலிருந்து விழுந்தவர் சிகிச்சை பலனின்றி பலி
/
டூவீலரிலிருந்து விழுந்தவர் சிகிச்சை பலனின்றி பலி
ADDED : மார் 07, 2025 01:55 AM
டூவீலரிலிருந்து விழுந்தவர்
சிகிச்சை பலனின்றி பலி
கரூர்,:
கரூரில், டூவீலரில் இருந்து நிலை தடுமாறி விழுந்தவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
கரூர், திருமாநிலையூரை சேர்ந்தவர் துரைராஜ், 49. கடந்த பிப்., 8ல், திருமாநிலையூரில் இருந்து ராயனுார் சாலையில், இரண்டு சக்கர வாகனத்தில் செல்லும் போது நிலை தடுமாறி விழுந்தார். அப்போது தலையில் பலத்த காயமடைந்து, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மேல் சிகிச்சைக்காக, திருச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.
இது குறித்து, தான்தோன்றிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.