sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கொடிமுடியில் இருந்து பழனிக்குசிறப்பு பஸ் இயக்க வலியுறுத்தல்

/

கொடிமுடியில் இருந்து பழனிக்குசிறப்பு பஸ் இயக்க வலியுறுத்தல்

கொடிமுடியில் இருந்து பழனிக்குசிறப்பு பஸ் இயக்க வலியுறுத்தல்

கொடிமுடியில் இருந்து பழனிக்குசிறப்பு பஸ் இயக்க வலியுறுத்தல்


ADDED : மார் 07, 2025 02:48 AM

Google News

ADDED : மார் 07, 2025 02:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடிமுடியில் இருந்து பழனிக்குசிறப்பு பஸ் இயக்க வலியுறுத்தல்

கரூர்:-கொடுமுடியிலிருந்து, பழனிக்கு தென்னிலை, சின்னதாராபுரம் வழியாக சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற, பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனி உத்திரம் திருவிழாவில் பங்கேற்க, திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர், கரூர், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து, லட்சக்கணக்கான பக்தர்கள் செல்வர். இவர்கள், கொடுமுடி காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்காவடி சுமந்து, நேர்த்திக்கடன் செலுத்த செல்கின்றனர். இந்தாண்டு ஏப்., 11ல், பங்குனி உத்திரத்திருவிழா நடக்கிறது. இதை முன்னிட்டு, பங்குனி மாதம் 1ம் தேதி முதல் வைகாசி மாதம் வரை, மூன்று மாதத்திற்கு பக்தர்கள் வசதிக்கேற்ப, தமிழக அரசு சார்பில் சிறப்பு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது குறித்து பக்தர்கள் கூறியதாவது: பங்குனி உத்திரம் திருவிழாவிற்கு, மாலை அணிவித்த பக்தர்கள் கொடுமுடி காவிரி ஆற்றில், புனித நீராடிய பின் பழனிக்கு செல்கின்றனர். இவர்கள் பழனிக்கு செல்ல, கரூருக்கு செல்ல வேண்டி உள்ளது. இங்கிருந்து கரூர் வழியாக பழனிக்கு செல்ல, 130 கி.மீ துாரம் சுற்றி செல்ல வேண்டி உள்ளது.

அதேசமயம் கொடிமுடியிலிருந்து, தென்னிலை, சின்ன தாராபுரம் வழியாக, 95 கி.மீ., துாரத்தில் பழனிக்கு சென்று விடலாம். கொடுமுடியிலிருந்து, நேரடியாக பஸ் வசதி இல்லாததால், பக்தர்கள் தேவையில்லாமல், 35 கி.மீ. பயணிக்கும் போது பணம், நேரம் விரயமாகிறது. எனவே சம்பந்தப்பட்ட போக்குவரத்து கழக நிர்வாகம் சார்பில், விழா காலங்களிலாவது கொடுமுடியிலிருந்து பழனிக்கு சிறப்பு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us