sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தொடர் மழையால் பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணை நிரம்பியது

/

தொடர் மழையால் பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணை நிரம்பியது

தொடர் மழையால் பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணை நிரம்பியது

தொடர் மழையால் பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணை நிரம்பியது


ADDED : மார் 14, 2025 02:06 AM

Google News

ADDED : மார் 14, 2025 02:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொடர் மழையால் பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணை நிரம்பியது

கரூர்:கரூர் மாவட்டத்தில் பெய்த, தொடர் மழை காரணமாக, பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணை நிரம்பியது.

கடந்த இரண்டு நாட்களாக, கரூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருதிறது. குறிப்பாக, அமராவதி ஆற்றின் நீர்ப்

பிடிப்பு பகுதிகளான அரவக்குறிச்சி, க.பரமத்தி வட்டாரங்களில் நல்ல மழை பெய்தது. இதனால், கரூர் அருகே உள்ள, பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து காரணமாக நேற்று முன்தினம் நிரம்பியது.

* திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணைக்கு நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து, 192 கன அடியாக இருந்தது. அமராவதி அணையில் இருந்து ஆற்றில் வினாடிக்கு, 250 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. புதிய பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 51.74 அடியாக இருந்தது.

* கரூர் அருகே மாயனுார் கதவணைக்கு நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 635 கன அடியாக தண்ணீர் வரத்து இருந்தது. அதில், 210 கன அடி தண்ணீர் காவிரியாற்றில் திறக்கப்பட்டது. நான்கு பாசன வாய்க்கால்களில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

* கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு நேற்று தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 10.52 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு, தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில், இரண்டு நாட்களாக பெய்த மழையால் விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.






      Dinamalar
      Follow us