sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூர் அருகே உயர்மட்ட பாலத்தில்தடுப்பு சுவர்களில் சீரமைப்பு பணி

/

கரூர் அருகே உயர்மட்ட பாலத்தில்தடுப்பு சுவர்களில் சீரமைப்பு பணி

கரூர் அருகே உயர்மட்ட பாலத்தில்தடுப்பு சுவர்களில் சீரமைப்பு பணி

கரூர் அருகே உயர்மட்ட பாலத்தில்தடுப்பு சுவர்களில் சீரமைப்பு பணி


ADDED : ஏப் 03, 2025 01:36 AM

Google News

ADDED : ஏப் 03, 2025 01:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் அருகே உயர்மட்ட பாலத்தில்தடுப்பு சுவர்களில் சீரமைப்பு பணி

கரூர்:கரூர் அருகே, உயர்மட்ட பாலத்தில் தடுப்பு சுவர்கள், சிலாப் கற்கள் சீரமைக்கப்பட்டுள்ளது.

கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலை சுக்காலியூர் அருகே, அமராவதி ஆற்றின் குறுக்கே, இரண்டு உயர்மட்ட பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. அந்த பாலங்களின் வழியாக, நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து, கரூர் செல்லும் உயர்மட்ட பாலத்தின் ஓரத்தில், நடைபாதையில் உள்ள சிலாப் கற்கள் பல மாதங்களாக சேதம் அடைந்திருந்தது. இதனால், கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், நடைபாதையில் அச்சத்துடன் சென்று வந்தனர்.

மேலும், பாலத்தின் தடுப்பு சுவர்களும் சேதமடைந்து காணப்பட்டது. ஆனால், உடைந்த பாலத்தின் தடுப்பு சுவர்களை, புதிதாக கட்டாமல் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் காலம் கடத்தி வந்தனர். இதனால், மதுரை உள்ளிட்ட, தென் மாவட்டங்களில் இருந்து, கரூர் உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு செல்லும், வாகன ஓட்டிகளும் அச்சத்துடன் சென்றனர்.

இதுகுறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, அமராவதி ஆற்றின் மேல் கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலத்தில் சீரமைப்பு பணிகளை, தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தொடங்கினர். தற்போது, தடுப்பு சுவர்கள் மற்றும் சிலாப் கற்கள் சீரமைக்கப்பட்டு, இரவில் ஒளிரும் வகையில், புதிதாக பெயின்ட் அடிக்கப்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.






      Dinamalar
      Follow us