ADDED : ஜூன் 22, 2024 12:49 AM
அ நிறம் | அளவு
கரூர் : தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கம் சார்பில், மாநில துணைத் தலைவர் நாகலட்சுமி தலைமையில் கலெக்டர் அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் நடந்தது.தாய்சேய் நலப்பணி தடுப்பூசி மற்றும் குடும்ப நலப்பணிகளை மேற்கொள்ள உரிய உத்தரவுகளை வழங்க வேண்டும்.
ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு, ஒரு டேட்டா- ஆப்ரேட்டர்களை நியமிக்க வேண்டும், பெண் சுகாதார செவிலியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.ஆர்ப்பாட்டத்தில், மாநில பொதுச்செயலாளர் நீலா, மாவட்ட துணைத்தலைவர் தனலட்சுமி, செயலாளர் ரத்தினகுமாரி உள்பட பலர் பங்கேற்றனர்.
