/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
'மாஜி' விளையாட்டு வீரர் ஓய்வூதியம் பெற அழைப்பு
/
'மாஜி' விளையாட்டு வீரர் ஓய்வூதியம் பெற அழைப்பு
ADDED : செப் 02, 2024 03:02 AM
கரூர் : முன்னாள் விளையாட்டு வீரர்கள் ஓய்வூதியம் பெற, வரும், 30க்குள் விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரி-வித்தார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், நலிந்த நிலையிலுள்ள முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்க-ளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இதில், குறைந்தபட்ச தகுதிகளான சர்வதேச, தேசிய
போட்டிகளில் கலந்துகொண்டு விளையாடி இருக்க வேண்டும். 58 வயது பூர்த்தியடைந்தவ-ராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரரின் மாத வருமானம், 6,000 ரூபாய் இருத்தல் வேண்டும். மத்திய, மாநில
அரசின் ஓய்வூதியம் பெறுபவர்கள் விண்ணப்பிக்க தகுதி இல்லை. www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்-பிக்கலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.