/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அதிகரிக்கும் வெயிலின் தாக்கம் எலுமிச்சம் பழம் விலை உயர்வு
/
அதிகரிக்கும் வெயிலின் தாக்கம் எலுமிச்சம் பழம் விலை உயர்வு
அதிகரிக்கும் வெயிலின் தாக்கம் எலுமிச்சம் பழம் விலை உயர்வு
அதிகரிக்கும் வெயிலின் தாக்கம் எலுமிச்சம் பழம் விலை உயர்வு
ADDED : பிப் 25, 2025 04:35 AM
கரூர்: கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், வெயிலின் தாக்கம் அதி-கரித்துள்ளதால், எலுமிச்சம் பழம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.
ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் கோடை காலம் நிலவுவது வழக்கம். நடப்பாண்டு, பிப்ரவரி மாத துவக்கத்தில் இருந்து, வெயில் அதிகளவில் நிலவி வருகிறது. கரூர் மாவட்-டத்தில் கடந்த, ஐந்து நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகம் உள்-ளது. கரூர் மாவட்டத்தில் எலுமிச்சை சாகுபடி அதிகளவில் இல்லை. திண்டுக்கல், புதுக்கோட்டை, ஈரோடு, சேலம் உள்-ளிட்ட மாவட்டங்களில் இருந்து, எலுமிச்சை கொண்டு வரப்படு-கிறது.
கரூரில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் ஒரு கிலோ எலு-மிச்சம் பழம், 40 முதல், 50 ரூபாய் வரை விற்றது. தற்போது, குளிர்பானங்கள் தயாரிப்பு, உணவு பொருட்கள் தயாரிப்புக்கு எலு-மிச்சம் பழத்தேவை அதிகரித்துள்ளது. இதனால் ஒரு கிலோ எலு-மிச்சம் பழம், 60 முதல், 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்படு-கிறது.இதுகுறித்து, விற்பனையாளர்கள் கூறியதாவது: கரூர் மாவட்-டத்தில், எலுமிச்சம் பழம் சாகுபடிக்கு என தனியாக தோட்-டங்கள் கிடையாது. விவசாய தோட்டங்களில், ஒரு சில எலு-மிச்சை மரங்கள் உள்ளன. ஏப்ரல், மே மாதங்களில், வெயில் உச்-சத்தை தொடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், எலுமிச்சம் பழத்துக்கு அதிக தேவை ஏற்படும். எனவே ஏப்ரல் மாத இறுதியில் இருந்து, எலுமிச்சம் பழம் விலை இன்னும் அதிகரிக்கும். கடந்த மாதம் இரண்டு ரூபாய்க்கு விற்ற, ஒரு எலுமிச்சம் பழம் தற்போது, ஐந்து ரூபாய் வரை விற்பனை செய்-யப்படுகிறது.இவ்வாறு கூறினர்.