ADDED : ஜன 11, 2025 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மகன் மாயம்; தந்தை புகார்
கரூர்: கரூரில் மகனை காணவில்லை என, போலீசில் தந்தை புகார் செய்துள்ளார்.கரூர், அர்ச்சனா நகரை சேர்ந்த செல்வகுமார் என்பவரது மகன் விஜயகுமார், 30; திருமணமாகவில்லை. இவர் கடந்த, 6ல் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். ஆனால், இது வரை விஜயகுமார் வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நண்பர்களின்
வீடுகளுக்கும் அவர் செல்லவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த தந்தை செல்வகுமார், போலீசில் புகார் செய்தார். கரூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.