ADDED : ஜன 18, 2025 01:29 AM
அ நிறம் | அளவு
கரூர், : தமிழகத்தில் கடந்த, 13 முதல் நேற்று முன்தினம் வரை, பொங்கல் திருவிழா நடந்தது. நேற்று அரசு விடுமுறை என்பதால், அரசு துறை அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல் லுாரிகள் செயல்படவில்லை.
இதனால், நேற்றும் பொங்கல் திருவிழாவை யொட்டி, கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதி களில் விளையாட்டு போட்டிகள் நடந்தன.
கரூர் சுங்ககேட் பகுதியில் நடந்த, விளையாட்டு போட்டிகளில் பெண்கள், சிறுவர், சிறுமி யர்கள் பங்கேற்றனர். பிறகு, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
