sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வடிநிலக்கோட்ட பொறியாளர் அலுவலகத்தை மீண்டும் கரூருக்கு மாற்ற விவசாயிகள் கோரிக்கை

/

வடிநிலக்கோட்ட பொறியாளர் அலுவலகத்தை மீண்டும் கரூருக்கு மாற்ற விவசாயிகள் கோரிக்கை

வடிநிலக்கோட்ட பொறியாளர் அலுவலகத்தை மீண்டும் கரூருக்கு மாற்ற விவசாயிகள் கோரிக்கை

வடிநிலக்கோட்ட பொறியாளர் அலுவலகத்தை மீண்டும் கரூருக்கு மாற்ற விவசாயிகள் கோரிக்கை


ADDED : ஜூலை 06, 2024 01:08 AM

Google News

ADDED : ஜூலை 06, 2024 01:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், : 'தாராபுரத்துக்கு மாற்றப்பட்ட அமராவதி ஆறு வடிநிலக்கோட்ட பொறியாளர் அலுவலகத்தை, கரூருக்கு மீண்டும் கொண்டு வர வேண்டும்' என, கரூர் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை வைத்-துள்ளனர்.

பழைய கோவை மாவட்டம் திருப்பூர் அருகே உடுமலை பேட்-டையில் கடந்த, 1954 ல் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் ராஜாஜியால், அடிக்கல் நாட்டப்பட்டு, 1958 ல் காமராஜ் முதல்வ-ராக இருந்த போது அமராவதி அணை கட்டி முடிக்கப்பட்டு திறக்-கப்பட்டது. மொத்த உயரம், 90 அடியாகும். கேரளா நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் கிளை ஆறுகளான வரதமாஞ்சாதி, பாம்பாறு, நஞ்சகாளக்குறிச்சி மற்றும் குடகானாறு மூலம் அமராவதி ஆற்-றுக்கு தண்ணீர் வருகிறது. இறுதியாக, கரூர் மாவட்டத்தில் திரு-முக்கூடலூர் பகுதியில் காவிரியாற்றில் அமராவதி ஆறு கலக்கி-றது.

தற்போது, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் பழைய, புதிய ஆயக் கட்டுகளில் உள்ள வாய்க்கால் பகுதிகளில், 55 ஆயிரத்-துக்கும் மேற்பட்ட ஏக்கர் பாசன வசதியை பெறுகிறது. கரூர் மாவட்டத்தில் உள்ள, 11 வாய்க்கால்களில், ஒரு சில வாய்க்கால் பகுதியை தவிர மற்ற பகுதிகளில், 15 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இதனால், விவசாயிகளின் கோரிக்கை-படி, அமராவதி வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் அலுவ-லகம், பல ஆண்டுகளாக கரூரில் செயல்பட்டு வந்தது.

இந்த அலுவலகத்தின் மூலம், அமராவதி அணையின் நீர் இருப்பு, தண்ணீர் திறப்பு தேதி, வாய்க்கால் மராமத்து பணி குறித்த விபரம், சாகுபடி விபரங்களை, கரூர் மாவட்ட விவசா-யிகள் தெரிந்து கொள்ள வசதியாக இருந்தது. இந்நிலையில், கரூரில் இருந்து செயற்பொறியாளர் அலுவலகம் கடந்த, 2012 இறுதியில் திருப்பூர் மாவட்டம், தாராபுரத்துக்கு மாற்றப்பட்டது.

இதுகுறித்து, கரூர் மாவட்டத்தை சேர்ந்த அமராவதி ஆற்று பாசன விவசாயிகள் கூறியதாவது:

அமராவதி ஆறு மூலம், கரூர் மாவட்டத்தில் நடந்து வந்த, விவ-சாய சாகுபடி பணி படிப்படியாக குறைந்து வருகிறது. பழைய ஆயக்கட்டு பகுதிகளில் உள்ள பெரும் பாலான வாய்க்காலில் புதர் மண்டி கிடக்கிறது. சில வாய்க்காலில் சாயக்கழிவு தான் ஓடு-கிறது. அமராவதி ஆற்றில் போதிய தண்ணீர் திறக்கப்படாததால், மீதமுள்ள சில வாய்க்காலில் தண்ணீர் இல்லாததால் வறண்டு போய் விட்டது. கரூர் மாவட்டத்தில் உள்ள பழைய ஆயக்கட்டு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

இதனால், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்-கப்பட்டுள்ளனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு மறை-முக விவசாய வேலை கிடைக்கவில்லை. அமராவதி ஆற்றுப் பகுதி குறித்து விவசாயிகள் புகார் செய்ய, செயற்பொறியாளர் அலுவலகம் கரூரில் இருந்தது.

இதை கடந்த, 2012ல் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்துக்கு மாற்றி விட்டனர். இதனால், கரூர் மாவட்டத்தை சேர்ந்த பழைய ஆயக்-கட்டு பகுதி விவசாயிகள் மனு கொடுக்கவே, 70 கிலோ மீட்டர் தாராபுரம் செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. கரூர் மாவட்ட விவசாயிகள் பலமுறை மனு கொடுத்தும், போராட்டம் நடத்தியும், பொறியாளர் அலுவலகம் மீண்டும் கரூருக்கு மாற்றப்-படவில்லை. அதை மீண்டும், கரூருக்கு மாற்ற வேண்டும்.

இவ்வாறு தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us