/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் குறைதீர் கூட்டம் நலத்திட்ட உதவி வழங்கல்
/
கரூரில் குறைதீர் கூட்டம் நலத்திட்ட உதவி வழங்கல்
ADDED : ஆக 20, 2024 02:55 AM
கரூர்: கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம், கலெக்டர் தங்கவேல் தலைமையில் நடந்தது.
ஓய்வூதியம், வங்கி கடன், இலவச வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு, உதவி உபகரணங்கள் உள்பட மொத்தம், 491 மனுக்கள் மக்களிடம் இருந்து பெறப்பட்டன. மாற்றுத்திறனாளிகளிடம், 40 மனுக்கள் பெறப்பட்டது. மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுரை கூறப்பட்டது.
வருவாய்த்துறை சார்பில் மண்மங்கலம் வட்டத்தை சேர்ந்த, ஐந்து பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களையும், முதல்வர் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், விபத்து நிவாரண உதவித்தொகையாக ஒரு பயனாளிக்கு, 1 லட்சம் ரூபாய் காசோலை என, மொத்தம் ஆறு பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கூட்டத்தில் டி.ஆர்.ஓ., கண்ணன், சப்-கலெக்டர் பிரகாசம், ஆர்.டி.ஓ.,க்கள் முகமது பைசல் (கரூர்) தனலெட்சுமி (குளித்தலை) உள்பட பலர் பங்கேற்றனர்.

