/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு
/
அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு
ADDED : செப் 07, 2024 07:29 AM
கரூர்: அமராவதி அணையில் இருந்து, ஆற்றில் திறக்கப்பட்ட தண்-ணீரின் அளவு நேற்று குறைக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணையில் இருந்து ஆற்றில் வினாடிக்கு, 492 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில், நீர்ப்பிடிப்பு பகுதிகளில், மழை இல்லாததால், தண்ணீர் வரத்து படிப்படியாக குறைந்து வருகி-றது. இதனால், ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு, 492 கன அடியில் இருந்து, 200 கன அடியாக நேற்று குறைக்கப்பட்-டது.
நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி வினாடிக்கு தண்ணீர் வரத்து, 259 கன அடியாக இருந்தது. புதிய பாசன வாய்காலில், தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 90 அடி கொண்ட அமராவதி அணையின் நீர் மட்டம், 89 அடியாக இருந்-தது.
* கரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து வினாடிக்கு, 18 ஆயிரத்து, 106 கன அடியாக இருந்தது. காவிரியாற்றில், 16 ஆயிரத்து, 686 கன அடி தண்ணீரும், தென்கரை பாசன வாய்க்கால், கீழ் கட்-டளை வாய்க்கால் உள்ளிட்ட, நான்கு பாசன வாய்க்காலில், 1,420 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.
* க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்-மட்டம், 25.25 அடி யாக இருந்ததால், நொய்யல் பாசன வாய்க்-காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.