/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கிருஷ்ணராயபுரத்தில் வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை வீழ்ச்சி
/
கிருஷ்ணராயபுரத்தில் வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை வீழ்ச்சி
கிருஷ்ணராயபுரத்தில் வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை வீழ்ச்சி
கிருஷ்ணராயபுரத்தில் வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை வீழ்ச்சி
ADDED : ஆக 31, 2024 12:31 AM
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் பகுதிகளில், வரத்து அதிகரிப்பால் தக்காளி விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த தாராபுரத்தனுார், கோவில்பட்டி, அந்த-ரப்பட்டி, மலையாண்டிப்பட்டி, செக்கணம், சேங்கல் ஆகிய இடங்களில் விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்து வருகின்றனர். கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர்
பாய்ச்சப்படுகிறது. தற்-போது தக்காளி விளைச்சல் காரணமாக, வெளி பகுதிகளில் இருந்து அதிகமான அளவில் தக்காளி வரத்தாகிறது. இதனால் கிருஷ்ணராயபுரம் வாரச்சந்தைகளில் கிலோ, 20 ரூபாய்க்கு விற்-கப்படுகிறது.
விலை வீழ்ச்சி காரணமாக உள்ளூர் விவசாயிக-ளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் தக்காளி கிலோ, 40 ரூபாய்க்கு விற்றது குறிப்பிடத்தக்கது.