/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வடகிழக்கு பருவமழை துவங்குவதால் நிழற்கூடங்களை சீரமைக்க எதிர்பார்ப்பு
/
வடகிழக்கு பருவமழை துவங்குவதால் நிழற்கூடங்களை சீரமைக்க எதிர்பார்ப்பு
வடகிழக்கு பருவமழை துவங்குவதால் நிழற்கூடங்களை சீரமைக்க எதிர்பார்ப்பு
வடகிழக்கு பருவமழை துவங்குவதால் நிழற்கூடங்களை சீரமைக்க எதிர்பார்ப்பு
ADDED : செப் 02, 2024 03:02 AM
கரூர்: கரூர் மாவட்டத்தில், பிரதான தொழிலாக ஜவுளி உற்பத்தி, கொசுவலை உற்பத்தி, பஸ் பாடி கட்டுமான தொழில் போன்-றவை ஜரூராக நடந்து வருகிறது. இதனால், கரூர் மாவட்டத்தில் இருந்து மட்டுமல்லாமல், நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகு-திகளில் இருந்தும், நாள்தோறும் நுாற்றுக்கணக்கான தொழிலா-ளர்கள், கரூருக்கு வந்து செல்கின்றனர்.
குறிப்பாக, சேலம் செல்லும் சாலையில் உள்ள, புகளூர், தோட்-டக்குறிச்சி, மண் மங்கலம், அய்யம்பாளையம் போன்ற பகுதி-களில் இருந்து நிறைய தொழிலாளர்கள் பஸ் மூலம் கரூர் வந்து செல்கின்றனர். ஆனால், கரூர் -
சேலம் நெடுஞ்சாலையில் முக்-கிய இடங்களில் பயணிகள் நிற்க வசதியாக நிழற்கூடம் அமைக்-கப்பட்டது. ஆனால், பல இடங்களில் அமைக்கப்பட்ட நிழற் கூடங்களின் மேற்கூரை உடைந்துள்ளது. பயணிகள் உட்கார
அமைக்கப்பட்ட சீட்கள் கழன்றும், காணாமல் போய் விட்டது. இதனால், பயணிகள் மழை, வெயிலுக்கு நிழற்கூடங்களில் உட்-கார முடியாமல் அவதிப்படுகின்றனர்.இம்மாத இறுதியில் வடகிழக்கு பருவமழை துவங்க உள்-ளதால், பொதுமக்களின் நலன் கருதி கரூர்- - சேலம் தேசிய நெடுஞ்சாலைகளில், பழுதடைந்துள்ள நிழற்கூடங்களை சீர-மைக்க, கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும்
சம்பந்தப்பட்ட கிராம பஞ்சாயத்து அமைப்புகள் நடவடிக்கை எடுப்பது அவசியம்.