/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கொத்தமல்லி சாகுபடி பணியில் விவசாயிகள்
/
கொத்தமல்லி சாகுபடி பணியில் விவசாயிகள்
ADDED : மார் 22, 2025 01:28 AM
கொத்தமல்லி சாகுபடி பணியில் விவசாயிகள்
கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் பகுதிகளில், கொத்தமல்லி சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட குழந்தைப்பட்டி, வரகூர், கோடங்கிப்பட்டி, சிவாயம், சரவணபுரம், வேப்பங்குடி, வேங்காம்பட்டி, புதுப்பட்டி ஆகிய பகுதியில் விவசாயிகள் கொத்தமல்லி சாகுபடி செய்து வருகின்றனர். கொத்தமல்லி சாகுபடிக்கு தேவையான தண்ணீர் கிணற்று நீர் பாசன முறையில் பாய்ச்சப்படுகிறது. தற்போது வெயில் அதிகம் அடிப்பதால் கொத்தமல்லி செடிகள் வளர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகளுக்கு கூடுதல் மகசூல் கிடைக்கிறது. கொத்தமல்லி ஒரு கட்டு, 10 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
உள்ளூர் வாரச்சந்தைகள் மற்றும் மக்கள் கூடும் பஸ் ஸ்டாப் பகுதியில். கொத்தமல்லியை கூவி கூவி விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். மேலும் கரூர், திருச்சி ஆகிய பகுதிகளில் செயல்படும் காய்கறி மார்க்கெட்டுகளுக்கு சென்று விற்கப்படுகிறது.