ADDED : ஏப் 18, 2025 01:16 AM
அ நிறம் | அளவு
கரூர்:
கரூர், தலைமை தபால் நிலைய அலுவலகம் முன், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
நகரச் செயலாளர் ஜோதிபாசு தலைமை வகித்தார். முஸ்லிம் சமூகத்தின் சொத்துக்களை பராமரித்து வரும் வக்ப் வாரிய சட்டத்தில், ஜனநாயக சக்திகளின் எதிர்ப்பையும் மீறி, இதற்கான சட்டத்தை, பார்லிமென்டில் மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. இதனை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட குழு
உறுப்பினர்கள் ஜீவானந்தம், முருகேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
