/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கவுன்சிலர் தன் சொந்த செலவில் பொது மக்களுக்கு குடிநீர் சப்ளை
/
கவுன்சிலர் தன் சொந்த செலவில் பொது மக்களுக்கு குடிநீர் சப்ளை
கவுன்சிலர் தன் சொந்த செலவில் பொது மக்களுக்கு குடிநீர் சப்ளை
கவுன்சிலர் தன் சொந்த செலவில் பொது மக்களுக்கு குடிநீர் சப்ளை
ADDED : ஆக 26, 2024 02:30 AM
அரவக்குறிச்சி: பள்ளப்பட்டி நகராட்சியில், 27 வார்டுகள் உள்ளன. பள்ளப்பட்டி, அரவக்குறிச்சி பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு வெகு நாட்களாக இருந்து வருகிறது.
க.பரமத்தியில் இருந்து அரவக்குறிச்சி வழியாக பள்ளப்பட்டிக்கு செல்லும் காவிரி குடிநீர் குழாயில், 100க்கும் மேற்பட்ட இடங்-களில் உடைப்பு ஏற்பட்டு, தினசரி, 20,000 லிட்டருக்கு மேல் குடிநீர் வீணாகி வருகிறது. மேலும், பள்ளப்பட்டி நகராட்சிக்குட்-பட்ட, 10வது வார்டில் மின் மோட்டார் பழுதடைந்து, கடந்த, 25 நாட்களுக்கும் மேலாக குடிநீர் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்-படவில்லை என, கூறப்படுகிறது.
இதுகுறித்து, 10வது வார்டு கவுன்சிலர் வகிதாபானு, நகராட்சி தலைவர், நகராட்சி ஆணையாளரிடம் பலமுறை தெரிவித்-துள்ளார்.
ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்காததால், பொதுமக்களிடமி-ருந்து தொடர்ந்து புகார் வந்தது. இதையடுத்து, கவுன்சிலர் வகிதா-பானு, தன் சொந்த செலவில், 10வது வார்டுக்குட்பட்ட பொது மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்தார். இதனால் பொது-மக்கள் அவரை பாராட்டினர்.