ADDED : ஆக 20, 2024 02:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்:கரூரில், கணவனை காணவில்லை என, மனைவி புகார் செய்துள்ளனர்.
கரூர் மாவட்டம், ஆண்டாங்கோவில் மருத்துவ நகரை சேர்ந்த முருகேசன் என்பவரது மகன் கணேஷ், 42, கூலி தொழிலாளி. இவர் கடந்த, 15ல் வீட்டில் இருந்து வெளியே சென்றார். ஆனால், திரும்பி வரவில்லை. உறவினர்கள், நண்பர்களின் வீடுகளுக்கும் கணேஷ் செல்லவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த கணேஷ் மனைவி புஷ்பலதா, 39, போலீசில் புகார் செய்தார். கரூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

