/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் 'சிக்னல்' லைட் பழுதால் விபத்து அபாயம்
/
கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் 'சிக்னல்' லைட் பழுதால் விபத்து அபாயம்
கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் 'சிக்னல்' லைட் பழுதால் விபத்து அபாயம்
கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் 'சிக்னல்' லைட் பழுதால் விபத்து அபாயம்
ADDED : ஆக 19, 2024 03:10 AM
கரூர்: கரூர் அருகே, போக்குவரத்து சிக்னல் செயல்படாமல் உள்-ளதால், அப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில், பல்வேறு இடங்-களில் போக்குவரத்தை சீர் செய்யவும், விபத்துகளை தடுக்கவும், சிக்னல் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், பல இடங்-களில் சிக்னல் விளக்குகள் சேதமடைந்து கிடக்கின்றன. குறிப்-பாக, கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலை அம்பாள் நகர் பிரிவு பகுதியில், பல மாதங்களாக சிக்னல் விளக்குகள் எரியாமல் சேத-மடைந்துள்ளன. இதனால், கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சா-லையில் இருந்து கரூர் நகர பகுதிக்கு செல்லும் வாகனங்கள், மதுரை, திண்டுக்கல் மாவட்ட பகுதியில் இருந்து, கோவை தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் வாகனங்கள் அடிக்கடி போக்-குவரத்தில் சிக்குகின்றன.
மேலும், கரூர் நகரில் இருந்து அம்பாள் நகர் உள்ளிட்ட, பல பகுதிகளுக்கு செல்லும் வாகனங்களும், விபத்து மற்றும் போக்கு-வரத்து நெரிசலில் சிக்குவதால், சிறு சிறு விபத்துகள் ஏற்படுகின்-றன. எனவே, கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலை அம்பாள் நகர் பிரிவில், செயல்படாமல் சேதமடைந்துள்ள, சிக்னல் விளக்-குகளை, தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சரி செய்ய வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.