ADDED : ஆக 19, 2024 03:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த பிள்ளபாளையம், வல்லம், கொம்பா-டிப்பட்டி, வீரகுமாரன்பட்டி, வீரவள்ளி, மகாதானபுரம், பொய்-கைப்புத்துார், மகிளிப்பட்டி, திருக்காம்புலியூர் ஆகிய பகுதியில் விவசாயிகள் விளை நிலங்களில் வாழை சாகுபடி செய்து வருகின்-றனர். விளைந்த வாழைத்தார்களை அறுவடை செய்து, லாலாப்-பேட்டை வாழைக்காய் ஏல கமிஷன் மண்டியில் வைத்து விற்-பனை செய்து வருகின்றனர்.
சில வாரங்களாக, மண்டியில் வாழைத்தார் விலை உயர்ந்து விற்-பனை செய்யப்பட்டு வருகிறது. இதில், பூவன் தார், 300 ரூபாய், ரஸ்தாளி, 350 ரூபாய், கற்பூரவள்ளி, 250 ரூபாய் என்ற, விலையில் விற்பனை செய்யப்பட்டது. உள்ளூர், வெளியூர் வியா-பாரிகள் வாங்கிச் சென்றனர்.