sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கொட்டப்பட்டுள்ள கோழி கழிவு தொற்றுநோய் பரவும் அபாயம்

/

கொட்டப்பட்டுள்ள கோழி கழிவு தொற்றுநோய் பரவும் அபாயம்

கொட்டப்பட்டுள்ள கோழி கழிவு தொற்றுநோய் பரவும் அபாயம்

கொட்டப்பட்டுள்ள கோழி கழிவு தொற்றுநோய் பரவும் அபாயம்


ADDED : ஆக 25, 2024 01:16 AM

Google News

ADDED : ஆக 25, 2024 01:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், ஆக. 25-

கரூர் அருகே, கொட்டப்பட்டுள்ள கோழி கழிவுகளால், தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. கரூர் மாநகராட்சி, தான்தோன்றிமலை ரயில்வே ஸ்டேஷன் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. அந்த வழியாக, ஏமூர் பஞ்., மற்றும் சுற்று வட்டார பகுதிகளுக்கு, பொதுமக்கள் வாகனங்களில் சென்று வருகின்றனர்.

இந்நிலையில், அந்த பகுதியில் சாலையின் இரண்டு பக்கமும், கோழி கழிவுகளை இரவு நேரத்தில் சிலர் கொட்டி விட்டு சென்று விடுகின்றனர். அதை மாநகராட்சி நிர்வாகம் மற்றும் ஏமூர் பஞ்., நிர்வாகம் உடனுக்குடன் அகற்றுவது இல்லை.

தற்போது, கரூர் பகுதிகளில் அடிக்கடி மழை பெய்து வருகிறது. அதில், கோழி கழிவுகள் நனைந்து, துர்நாற்றம் வீசுகிறது. மேலும், அந்த பகுதியில் சுற்றித்திரியும் நாய்கள், கோழி கழிவுகளை இழுத்து சென்று சாலையில் போட்டு விடுவதால், பொது மக்கள் தொற்று நோய் ஏற்படும் அச்சத்தில் உள்ளனர்.

எனவே, தான்தோன்றிமலை ரயில்வே ஸ்டேஷன் அருகே, கொட்டப்பட்டுள்ள கோழி கழிவுகளை அகற்ற, கரூர் மாநகராட்சி மற்றும் ஏமூர் பஞ்., நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.






      Dinamalar
      Follow us