/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
காவிரி ஆற்றில் மணல் கடத்தல் எஸ்.பி., சாட்டையை சுழற்றுவாரா?
/
காவிரி ஆற்றில் மணல் கடத்தல் எஸ்.பி., சாட்டையை சுழற்றுவாரா?
காவிரி ஆற்றில் மணல் கடத்தல் எஸ்.பி., சாட்டையை சுழற்றுவாரா?
காவிரி ஆற்றில் மணல் கடத்தல் எஸ்.பி., சாட்டையை சுழற்றுவாரா?
ADDED : ஆக 19, 2024 03:19 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த மருதுார் டவுன் பஞ்., காவிரி ஆற்றின் வீரம்பூர் பகுதியில், சிவகங்கை காவிரி கூட்டு குடிநீர் திட்டப்-பணி நடந்து வருகிறது. இப்பகுதியில், இரவு நேரத்தில் மணல் கடத்தல் நடந்து வருகிறது. வருவாய்த்துறை சார்பில், வி.ஏ.ஓ.,க்கள் மற்றும் கிராம உதவியாளர்கள், இரவு நேரத்தில் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என, தாசில்தார் சுரேஷ் உத்தர-விட்டுள்ளார்.
ஆனால், வருவாய்த்துறையினர் இந்த உத்தரவுகளை மதிக்-காமல் உள்ளனர். இதனால், தினந்தோறும் இரவில் மணல் கடத்தல் ஜோராக நடந்து வருகிறது. புதிதாக பொறுப்பேற்ற, எஸ்.பி., குளித்தலை பகுதி காவிரி ஆற்றில் லாரியில் மணல் கடத்தல் நடப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என, சமூக ஆர்வ-லர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

