ADDED : ஜூலை 23, 2025 01:42 AM
அ நிறம் | அளவு
கரூர், கரூர் தான்தோன்றிமலை அரசு கல்லுாரியில் மாணவ, மாணவியரிடம், ஓரணியில் தமிழ்நாடு தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை குறித்து துண்டுபிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டது. இதில், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் சரவணமூர்த்தி தலைமைவகித்தார்
. கரூர் மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன், தி.மு.க., ஆட்சியில் வளர்ச்சி திட்டங்கள் குறித்தும், ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையில் மாணவ, மாணவியர் சேர வேண்டும் என கூறி துண்டுபிரசுரங்களை வழங்கினர். கரூர் மாநகர செயலாளர் கனகராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.
