/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் ஆமை வேகத்தில் நடக்கும் மீன் மார்க்கெட் கட்டுமான பணி
/
கரூரில் ஆமை வேகத்தில் நடக்கும் மீன் மார்க்கெட் கட்டுமான பணி
கரூரில் ஆமை வேகத்தில் நடக்கும் மீன் மார்க்கெட் கட்டுமான பணி
கரூரில் ஆமை வேகத்தில் நடக்கும் மீன் மார்க்கெட் கட்டுமான பணி
ADDED : செப் 15, 2024 01:14 AM
கரூர், செப். 15-
கரூர் மாநகராட்சி வெங்கமேட்டில், மீன் மார்க்கெட் கட்டும் பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது.
கரூர் வெங்கமேட்டில் இருந்து, இனாம் கரூர் செல்லும் சாலையோரம் பெரிய குளத்துப்பாளையத்தில், மீன் மார்க்கெட் வளாகம் செயல்பட்டு வந்தது. இங்கு டேம் மீன், ஆற்று மீன் மற்றும் கடல் மீன்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து தரப்பு மக்களும், இங்கு வந்து தேவையான மீன்களை வாங்கிச் சென்று வந்தனர். இந்த வளாகம் பழுதடைந்ததால் அவை அகற்றப்பட்டு, 1.55 கோடி ரூபாய் மதிப்பில், 10,000 சதுர அடியில், 25 கடைகள் கட்டும் பணிகள் நடந்து வருகிறது.
ஒராண்டுக்கு மேலாக பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. பணிகளை வேகப்படுத்தி, பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாகும்.