ADDED : ஆக 07, 2024 01:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்,
வெள்ளியணை அருகே, கார் மீது வேன் மோதிய விபத்தில், முதியவர் உயிரிழந்தார்.
கோவை மாவட்டம், சித்தன்னபுரம் பகுதியை சேர்ந்தவர் மாத்யூ குழந்தை ராஜ், 31; இவர், செவ்ரல்ட் காரில், தந்தை செல்வராஜூடன், 63, நேற்று முன்தினம் திருச்சி சாலை, குளத்துப்பாளையம் பஸ் ஸ்டாப்பில் சென்று கொண்டிருந்தார். காரை மாத்யூ குழந்தை ராஜ் ஓட்டினார். அப்போது, அந்த வழியாக திருப்பூரை சேர்ந்த நடராஜ், 40; என்பவர் ஓட்டி சென்ற ஈச்சர் வேன், கார் மீது மோதியது. அதில், தலையில் பலத்த அடிபட்டு செல்வராஜ் உயிரிழந்தார். வெள்ளியணை போலீசார் விசாரிக்கின்றனர்.