sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கொடுமுடி வாய்க்கால் திட்டத்தை நிறைவேற்ற விவசாயிகள் கோரிக்கை

/

கொடுமுடி வாய்க்கால் திட்டத்தை நிறைவேற்ற விவசாயிகள் கோரிக்கை

கொடுமுடி வாய்க்கால் திட்டத்தை நிறைவேற்ற விவசாயிகள் கோரிக்கை

கொடுமுடி வாய்க்கால் திட்டத்தை நிறைவேற்ற விவசாயிகள் கோரிக்கை


ADDED : ஆக 05, 2024 02:02 AM

Google News

ADDED : ஆக 05, 2024 02:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கடவூர் பஞ்., யூனியன் பகுதிகளில், விவசாய பணிகளை மேற்கொள்ள கொடுமுடி வாய்க்கால் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

கரூர் மாவட்டத்தில், நிலத்தடி நீர் மிகவும் குறைந்த பகுதியாக, கடவூர் பஞ்சாயத்து யூனியன் உள்ளது. அதில், 15க்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துகளில், விவசாய தொழிலே பிரதானமாக உள்ளது. போதிய மழை மற்றும் நிலத்தடி நீர் இருப்பு இல்லாததால் கடந்த, 1999ல் கொடுமுடி வாய்க்கால் திட்டம் உருவாக்கப்பட்டது.

அதன்படி நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளையத்தில் காவிரியாற்றின் குறுக்கே உள்ள தடுப்பணையை உயர்த்தி, தாதம்பாளையம், செட்டிபாளையம், அரவக்குறிச்சி, குஜிலியம்பாறை வடக்கு, கடவூர், வையம்பட்டி, மாமுண்டி ஆறு, விராலிமலை, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டம், குண்டாறு வரை வாய்க்கால் அமைப்பதாகும்.

காவிரியாற்றில் அதிகப்படியான வெள்ள நீர் ஓடும் போது, கொடுமுடி வாய்க்கால் மூலம் தண்ணீர் செல்ல வழிவகை செய்யப்பட்டது. ஆனால், 25 ஆண்டுகளாக கொடுமுடி வாய்க்கால் திட்டம் கிடப்பில் உள்ளது.

இதுகுறித்து, விவசாயிகள் கூறியதாவது:

கொடுமுடி வாய்க்கால் திட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால், தற்போது காவிரியாற்றில் ஓடும், உபரி நீர் மூலம், கரூர், திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருந்து இருக்கும். ஆனால், 25 ஆண்டுகளாக திட்டம் கிடப்பில் உள்ளது. கொடுமுடி வாய்க்கால் திட்டத்தை நிறை வேற்றக்கோரி, மறைந்த இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் உண்ணாவிரதம் இருந்தார். இதையடுத்து கடந்த, 2011 ஆக., மாதம், தமிழகத்தில் உள்ள நதிகள் இணைப்பு திட்டத்துக்கு, 3,784 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், அந்த அறிவிப்பு என்ன ஆனது என தெரியவில்லை. கொடுமுடி வாய்க்கால் திட்டத்துக்கு, 950 கோடி ரூபாய் மட்டும் செலவாகும். இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால், ஐந்து மாவட்டங்களில், பல லட்சக்கணக்கான ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us