sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ஆத்துப்பாளையம் அணை நிரம்புவதால் திறக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு

/

ஆத்துப்பாளையம் அணை நிரம்புவதால் திறக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு

ஆத்துப்பாளையம் அணை நிரம்புவதால் திறக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு

ஆத்துப்பாளையம் அணை நிரம்புவதால் திறக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு


ADDED : ஆக 23, 2024 01:25 AM

Google News

ADDED : ஆக 23, 2024 01:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி, ஆக. 23-

க.பரமத்தி அருகே உள்ள, ஆத்துப்பாளையம் அணை நிரம்ப உள்ளதால் அணையை திறக்க விவசாயிகள் எதிர்பார்த்துள்னனர்.

கரூர் மாவட்டம், க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கார்வழி அருகே உள்ள ஆத்துப்பாளையம் அணை, 18 ஆண்டுகளுக்கு பிறகு, 2019 நவம்பர் மாதம் நிரம்பியது. இதை தொடர்ந்து பாசனத்திற்காக, நொய்யல் வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதே போல கடந்த 2020, 2021ம் ஆண்டுகளில், அணைக்கு கூடுதல் தண்ணீர் வந்ததால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த, 20 நாட்களாக அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் ஆத்துப்பாளையம் அணைக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து வருகிறது. 26.90 அடி உயரம் கொண்ட அணையில், நேற்றைய காலை நிலவரப்படி அணை நீர்மட்டம், 25.97 அடியாக உள்ளது.

விரைவில் அணை நிரம்பி, உபரி நீர் வெளியேறும் நிலையில் உள்ளதால், விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என, அணையை நம்பி உள்ள விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர். இந்த அணை மூலம் க.பரமத்தி, கரூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில், 19,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us