/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர்-மதுரை சர்வீஸ் சாலையில் குவிந்துள்ள குப்பையால் தொற்று நோய் அபாயத்தில் மக்கள்
/
கரூர்-மதுரை சர்வீஸ் சாலையில் குவிந்துள்ள குப்பையால் தொற்று நோய் அபாயத்தில் மக்கள்
கரூர்-மதுரை சர்வீஸ் சாலையில் குவிந்துள்ள குப்பையால் தொற்று நோய் அபாயத்தில் மக்கள்
கரூர்-மதுரை சர்வீஸ் சாலையில் குவிந்துள்ள குப்பையால் தொற்று நோய் அபாயத்தில் மக்கள்
ADDED : ஆக 08, 2024 06:57 AM
கரூர்: கரூர்--மதுரை சர்வீஸ் சாலையின் இருபுறமும் குப்பை கொட்டப்-படுவதால், அந்த பகுதி குப்பை மேடாக மாறி வருகிறது. இதனால், தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கரூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலை, சின்ன ஆண்டாங்கோவில் பிரிவு பகுதியில், கொட்டப்பட்ட குப்பை அள்ளப்படாமல் தேங்கியுள்ளது. பலமான காற்று வீசும் போது, குப்பை சாலையில் சிதறுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் சிர-மப்பட்டு வருகின்றனர்.
மேலும், கரூரில் அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகி-றது. மதுரை சர்வீஸ் சாலையில் உள்ள குப்பை கழிவு கள் நனைந்து அழுகும் நிலை யில் உள்ளது. இதனால், அந்த பகு-தியை சேர்ந்த, பொதுமக்கள் பீதியில் உள்ளனர். எனவே, கரூர்-ம-துரை தேசிய நெடுஞ்சாலையின், சர்வீஸ் சாலையில், சின்ன ஆண்டாங்கோவில் பிரிவில், அதிகளவில் தேங்கியுள்ள குப்பை-களை அகற்ற, ஆண்டாங்கோவில் கிழக்கு, கிராம பஞ்சாயத்து நிர்-வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.